பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

லும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு. ஜூவன் உண்டு'

அவன் பேச்சு பேத்தல் எனக் கருதப்பட்டது, கும்பாபிஷேகம் நடந்தது, சிலை பரதிஷ்டையானது. கலைஞன் பூரித்துப்போனான் மகிழ்வால் ஆனால் என்ன உணர்ந்தான் பிறகு? காலப் போக்கிலே அவனது கலா திருஷ்டி. பெற்ற நிலைமையைப் பற்றி அவன் கனலே கண்டதென்ன?

'ஒரே கண்ணக் கனிந்த இருள்! ஹிருதய சூன்பம் போன்ற பாழ் இருட்டு!

இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது என்ன! இதுவா பழைய சிலை! உயரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே எல்லாம் மருள்!... மருள்!

அந்தகார வாசலில் சாயைகள் போல உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன,

எனக்கு மோட்சம். எனக்கு மோட்சம் ஏன்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக் கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை இப்படியே தினமும்...

நாட்கள், வருடங்கள், நாற்றாண்டுகள் அலைபோல் புரளுகின்றன. அந்த அனந்த கோடி வருடங்களிலே ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே-

எனக்கு மோட்சம்! - இது தான் பல்லவி, பாட்டு எல்லாம்!

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. 'உயிரற்ற மோட்சம் சிலையே! உன்னே காட்டக்