பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பார்களாக கலைக்கே தம் வாழ்வை ஆர்ப்பணித்த, ஆடல் வல்ல மங்கையர் ஆடவரின் காமயந்திரங்களாக மாறினர் காலப் போக்கிலே அன்றிருந்து, கோயில்கள் விபசாரக்கூடமாயின.

நாதஸ்வரமும் இன்னிசைக் கலைகளும் வளர நிர்மாணமான இடம் சம்பிரதாயத்துக்காக சகிக்க முடியாத ஊதல்களும், எருத் தட்டல் போன்ற இசைத் தட்டல்களும் ஒலிக்கும் இடமாயிற்று இன்றைய கோயில்களின் நிலை இது.

கலை வளர்க்க மானியம் பெற்று வாழ்ந்த ஆடல் நங்கைகளும், பாடல் பயில்வரும், இசை வல்லாரும் ஏதோ 'அத்தக் கொத்து' பெற்று கடனுக்கு மாரடித்த கணக்கிலே 'ஒப்பேத்து வியாபாரம்' செய்து வருகிறார்கள். 'சின்ன மேளம்' என்கிற பரதநாட்டியம் இப்பொழுது சந்நிதானங்களில் ஆடப்படுவதில்லை தினமும்.

ஆனால், செட்டிநாட்டுக் கோயில்களில் தினம் தோறும் இந்த அம்சமும் பூஜைவேளை புரோகிராம்களில் ஒன்றாக ஒழுங்காக நடைபெறுகிறது, அதற்காக உள்ள அம்மாள் சன்னதியில் நின்று கையையும் காலையும் உடலையும் ஆட்டி அசைப்பதைப்பார்த்தால் 'இவளுக்கு இந்த காக்கா வலிப்பு ஏன் வந்தது! ஐயோ பாவமே' என்று இரங்கத்தான் வேண்டியிருக்கிறது.

சில கோயில் பிரகாரச் சுவர்களின் கலை ஓவியங்கள் தீட்டப்பட்டு பின்னர் ஞான சூனியங்களால் மேல் பூச்சுப் பூசி சமாதி செய்யப்பட்டிருப்பது உண்டு, அக் கலாநயங்களைக் காணப்போவதற்கு முன் நடமாடும் குட்டி தேவதைகளை -- அதிகாரப் சாரிகளை --- தாஜா செய்தாகவேண்டும். போனா