இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132
கோயில் மணி
ஒரு நாள் இவர் அவனோடு பேசுவதை நான் கேட்டேன். “ஏண்டா, உன் பெண்டாட்டியை எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போகிறாய்?” என்றார் இவர்.
“நீங்கள் சொல்லுங்கள்; அங்கே சேர்த்து விடுகிறேன்.”
“பெண் வேண்டுமா, பிள்ளை வேண்டுமா?’” என்றார் இவர்.
“பெண் தான் பிறக்கும் சாமி, அந்தப் பெண்ணுக்குப் பெயர்கூடத் தயாராக இருக்கிறது.”
“என்ன பெயர்?”
“நம் வீட்டு அம்மா பெயர்தான் சாமி!”
எனக்கு உள்ளத்துக்குள்ளே ஒரு கிளுகிளுப்பு!