பக்கம்:கோயில் மணி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

கோயில் மணி

“என்ன உடம்பு எனக்கு? சும்மா உடம்பு, உடம்பு என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. இதோ அவருக்குப் போன் பண்ணுகிறேன், காரை அனுப்பச் சொல்லி. இதற்குத்தான் இரண்டு கார் வேணுமென்கிறது. அவருக்கு அது தெரிவதில்லை. முக்கால் வாசி நான்தான் ஊரில் இருக்கிறதே இல்லையே என்கிறார். எனக்கு எப்போது வேண்டுமோ, அப்போது கிடைக்கிறதில்லை...வெந்நீர் தயாராக இருக்கிறதா?. டாக்டர் ரசஞ்சாதம் சாப்பிடலாம் என்று சொன்னார் அல்லவா?...சரி, சரி, வள்ளி, இவனை அழாமல் பார்த்துக்கொள்...உங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டு உடனே அழைத்துக்கொண்டு வந்துவிடு... போ ராஜா சமத்தாய் இரு அம்மாவோடே நீ வரலாம். சமத்தாய் நடந்துகொள்...கானலதா எங்கே இருக்கிறாள், தெரியுமா?... திருவல்லிக்கேணியில் என்னவோ தெரு என்று சொன்னாளே... மைதிலிக்குப் போன்பண்ணிக்கேள்; அவளுக்குத் தெரியும்...இந்தா, அந்தப் பைலைப் பார்த்தால் தெரியுமே!... சரி, சரி, அதை யார் புரட்டிக் கொண்டிருப்பார்கள்? மைதிலியையே கேள். அவள் எதற்காக என்று கேட்பாள். விஷயத்தைச் சொல்லாதே... என்ன, தெரிகிறதா?

சட்டென்று எழுந்திருந்தாள். வெந்நீரில், குளித்தாள். ஏதோ சிறிது உணவு கொண்டாள். புறப்பட்டுவிட்டாள், தமயந்தியையும் அழைத்துக் கொண்டு.

குழந்தை மோகனுக்கு ஜூரம். உடம்பு மழுவாய்க் கொதிக்கிறது. ஆயா வள்ளி தன் மடியில் கிடத்தியிருக்கிறாள். நாராயணன் அன்று ஊரில் இருக்கிறார். அலுவலகம் போகவில்லை. அவர் முகத்தில் ஈயாடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/150&oldid=1384235" இலிருந்து மீள்விக்கப்பட்டது