பக்கம்:கோவூர் கிழார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

நலங்கிள்ளி அவர் கூறுவதைக் கவர்ந்து சிந்தித்தான். அவருடைய சொற்கள் எப்போதும் பொருளுடையனவாகவே இருக்கும். எதையும் நன்கு ஆராயாமல் சொல்லமாட்டார் அவர் என்பதை மன்னன் அறிவான். ஆகவே, அவர் சொன்னபடியே செய்வது நலம் என்று தெளிந்தான்; தான் கூறிய வஞ்சினத்தைச் செய்யுளாகப் பாடினான்.

அந்தப் பாடல் நெடுங்கிள்ளியின் காதில் விழுந்தது. அவன் அப்போதைக்கு எந்தக் குறும்பும் செய்யாமல் ஒழிந்தான். ஆயினும் தக்கபடி படைகளைச் சேர்த்துக்கொண்டு உறையூரின் மேற் படையெடுப்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/20&oldid=1089707" இலிருந்து மீள்விக்கப்பட்டது