பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் கவியோகி சுத்தானந்த பாரதியார் வழங்கிய மதிப்புக் கருத்துரை அகமுகக் காதலின் சுவைமிகக் கூட்டி அமுதத் தமிழிற் குழைத்த நற் கவிதை. (ஒ-ம். சுத்தானந்த பாரதி. அந்த ஒலி! பஞ்சாலைச் சங்கொலித்த அமுதஒலி, உழைத்தவர்க்கோ அன்பொலியாம் ! சிந்துபாடிப் புறப்பட்டான் சிவக்கொழுந்து, சிறகடித்து வலைப்பறவை பறந்ததென ! வந்துசேர்ந்த தோழர்கள் குரலெடுத்து . வரவேண்டும் பொதுவுடைமை எனவொலித்தார் : அந்தஒலி, இவன்குலத்து வாழ்வொலியாம்: . "அ.தென்ருே' என்றேங்கி வீடடைந்தான். 36