பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் மொழிப்பற்றே விழுப்பற்ருய் மொய்ப்புற்ருேன் முழுத்தமிழன்: பழிப்பற்ற விழிப்புற்றுப் - பதைப்புற்றுத் தமிழ்க்கிடரை அழிப்புற்றுக் களிப்புற்றேன் இழிப்பற்ற மறத்தமிழன் செழிப்புற்ற செந்தமிழ்ப்பேச் சுறப்பெற்றேன் செழுந்தமிழன். தமிழ்ப்பண்பா டொழுக்கமதன் தகவறிந்து தழுவவரும் இமிழ்கடலார் உலகினத்தார் இனியரென அரவணைத்துக் கமழன்பால் நண்பரெனக் கண்டிடுவோன் தமிழ்ப்பண்பன்: அமிழ்தன்புக் குயிரதையும் அளித்திடுவோன் அருந்தமிழன். 52