பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தொழிலுக் குயர்வுநூல், பாடநூல் தொன்மைப் பொருளுறு நூற்களும், எழிலுக் குரியபல் நூற்களும், எளியோர் வாழ்வகை நூற்களும், இழிவினை எரித்திடும் நூற்களும், இனநல முயர்த்திடும் நூற்களும், ஒழிவிலா தியற்றுவீர்: அறிஞரீர்! ஒழுக்கமே நூற்களால் பரப்புவீர் ! இல்லாத நற்பொருள் பிறமொழி இயம்பிடில் தமிழினில் ஆக்குவீர்! நல்லதோர் சொல்லினை உணர்த்திடும் நயமெனில் மொழிபெயர்த் திடுக,நீர் செல்லாத நூற்கள் எவற்றையும் יאי செல்லாத காசென ஒதுக்குவீர்! இல்லாத தமிழரிங் கில்லென இயற்றுவீர் தமிழக கிலத்திலே ! 82