பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். தொல்லறி வாளர்கள் ஆக்கிட்ட - தொன்னூல் நற்பொருள் வாய்ந்ததை நல்லுரை எளிதென ஆக்குவீர்! - நலிவைப் பெருக்கிடும் பொருளெனில் கல்லறை கட்டுவீர் ! ஒலியிடுங் கடலுடை உலகினில் தமிழகம் வல்லர சாக்கிடும் வலியினை வாய்த்துளிர், செயலில்ை ஆற்றுவீர்! மதர்த்துள தமிழறி புலவரீர் ! மடைதிறங் தனையதும் அறிவினைப் புதர்க்குளே பொதிந்தகன் மணியெனப் புதைத்துமே வாழ்வதும் காணமே ! இதற்கிது பொருளென, அன்றென இடைமறுப் பெழுதியே நாளெலாம் பதர்க்கென உழுவதை விட்டுநீர் பயனுடைச் செயல்களே ஆற்றுவீர்! 83