பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோவை. இளஞ்சேரன்


கோவை. இளஞ்சேரன்

தமிழனெனில் தமிழகத்தில்

தமிழுயர்வுக் கெழவேண்டும்;

தமிழனெனில் தாய்நாட்டின்

தனியுயர்வுக் கெழவேண்டும்;

தமிழ'னென உணர்வோடு

தன்னினத்தைத் தழுவலொடு

தமிழனெனில் உலகமதில்

தலைதுாக்கி நின்றிடுக!

86 தமிழ்அழிக்க நினைப்போனின்

தலையழிப்போன் தமிழனன்றோ!

தமிழினத்தைச் சுரண்டுவோனைத்

தகர்த்திடுவோன் தமிழனன்றோ !

தமிழகத்தில் தீப்பழக்கம்

தயக்கிடுவோன் தமிழனன்றோ!

தமிழ்மொழிக்கே தனிச்சிறப்பைத்

தருவோன்சீர்த் தமிழனன்றோ!<poem>

87


60