உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

சந்துவிட்டால் வந்துவிட்டேன்' என்றே ஒடிச்

சளைக்காமல் தமைப்புகழ்ந்து சார்ந்து நின்று, பந்துவிட்டால் தனைப் பற்றும் பான்மை போலே

பலபயனும் பற்றி நின்று பதவி கொள்வார் எந்தவகைப் பயன்பெறலாம் T,,” என்றே

எத்தவறும் செய்வதற்கே இணங்கி நிற்பார்; இந்தவகை மாந்தரினால் ஏற்றம் ೯TEುಖr

இழிசெயலாய்ப் போவதுமோர் அவலம் அன்றோ? - | 23

தாயன்பை நன்குணர்ந்த t தனயன் அன்றோ

தாய்மொழியைப் போற்றுகின்ற தகவைப் பெற்றுத் தாய்நாட்டைப் பேணுகின்ற தக்கோன் ஆவான்; தன்விரலைத் தான்இயக்கத் தெரியா மூடன் தோயின்ய யாழ்இயக்க வல்லான் கொல்லோ? - தொல்தமிழின் தகவறியான் தூயன் ஆகான்; வாயின்பம் எனப்பிறரைத் தூற்றும் வாயான் வளர்த்துவிட்ட தாய்மொழிக்கும் தாய்க்கும்

- - பொல்லான். | 24

77