இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
29. 'முதலடிதான் பாடுகிறாய்,
எனதருமைக் கருங்குயிலே!
எனைமயக்கும் @ಐಆtuLGo!
உணதருமைக் குரலெடுத்தே
உவகைதரும் பாட்டிசைப்பாய்!
மனதறுத்த அடிமை நிலை
மடிந்துவிட்ட தினியிங்கே;
தனதாட்சித் தொடக்கமெனத்
தலைநிமிர்த்திக் கூவிடுவாய்!
- | 62
வெளிக்கதவைத் திறந்துவைத்தே
வெண்கழுகை விரட்டிவிட்டேன்; களிக்கின்றேன் விடுதலையால்
கவிக்குயிலாய்ப் பறக்கின்றேன்; குளிக்கின்றேன் தன்னுரிமைக்
குளத்தினிலே எனக்குதித்துத் தெளிக்கின்ற முதலடியைத்
தெள்ளமுதாய்க் கூவிடுவாய்!
| 63
94