இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
நல்லிசையில் இனிக்கின்ற
நறும்பாட்டால் முதலடிதான் சொல்லுகின்றாய் கருங்குயிலே
செழிப்பெல்லாம் தனதென்னும்
பொல்லாத பருந்துனது
பொந்துக்குள் இருப்பதனை வெல்லுவதால் மற்றடியை
விரித்திடலாம் முயற்சிப்பாய்! -
164
அலுப்பின்றி, உழைப்பின்றி
அடுத்தவனைச் சுரண்டுகின்ற உலுத்தரெனும் கோட்டான்கள்
உன்னகத்தில் வளர்வதனைக் "கழுத்தினிலே கைவைத்துக்
கவிழ்த்துவிட்டேன்’ எனும் இசையை எழுப்புவதே உன்பாட்டின்
இறுதியடி முயற்சிப்பாய்!
|65
(தரவு கொச்சகக்
கலிப்பாக்கள்)
95