இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
வாயூறுஞ் சுவையூற்றாய்,
வளம் ஊறுஞ் சொல்லூற்றாய், வனப்பின் ஊற்றாய்த் தாயூறும் அன்பூற்றாய்த்
தனித்துறுந் தேனூற்றாய்த் தமிழைக் கண்டேம்;
ஆய்வாலும் அகழ்வாலும்
அறிவாலும் உணர்வாலும் அணுகித் தோயும் தோய்வாலும் நூல்படைக்குத்
தொழிலாலுந் திகழ்வன்றித் தொய்வே காணேம்.
|83
இளதுங்கு, கற்புமனை,
இசையாழோ டிளந்தென்றல், இரவு வானம், வளவயல்நெல், மழலைச்சொல்
வழங்குவதை இன்பத்தின் வடிவாய்க் கண்டேம்; உளம் உவக்கும் இவையாவும்
ஒருங்கிணைந்த பேரின்ப ஒலிய தாகிப் புலம் உவக்கப் பொலிகின்ற
பைந்தமிழைப் போல்.உலகிற் புதுமை காணேம்.
... -- | 84
108