இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை இளஞ்சேரன்
'அன்புடையான், புலமையினான்,
அருஞ்செயலில் திறனுடையான் என்ப தன்மேல் பண்புடையான் எனச்சொல்லும்
பதிவிற்கே உளமுவக்கும் பரிவைக் கண்டேம்; துன்புடைய சாதிப்பேய்,
தொல்லைதரும் மூடங்கள், துணியாத் தாழ்வு, என்புருக்கும் பண்பின்மை,
ஏழ்மைத்தி இவைநெறியாய் ஏற்கக் காணேம். }95
வைகறையில் இருக்கையிடல்,
விடியல்நூல், காலைக்குளி, பகலி லெல்லாம்
செய்பணிகள், மாலை நடை,
சேர் இரவில் எழுத்து,துயில் செயலாய்க் கண்டேம்;
மெய்யுணர்வும், மேலறிவும்
மிகுதெளிவும் பயன்விளைவும் உடல்ந லத்தோ
டெய்துகின்ற அமைதியதும் -
ஏற்றுகின்ற நெறிப்பயனில் ஏங்கல் காணேம்.
|96
- இருக்கை - ஆசனம்
| 14