இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
திரைமறைவுச் செய்திகளைத்
தீங்குதரும் நாற்றத்தைத் திறந்து காட்டி, அறையறையாய் அறிவித்தல்
அருவெறுப்புச் செயலாகி அழிக்கும், கண்டேம்; மறைபொருளாய்த் தாம்செய்த
மாசுகளை மற்றவர்க்கு மலர்த்திக் காட்டி அறைவாரோ? அதற்குமனம்
இசைவாரோ? அப்பணியில் அமைவார் காணேம். 207
“வணக்கம்'என் றுரைப்பதினும்
'வணங்கிமகிழ் கின்றேன்'என் றுரைக்கும் பாங்கில்
இணக்கத்தின் இணங்குகின்ற
இடையேறும் மென்மையொலி இனிதாய்க்
கண்டேம்; கணக்கற்றோர் இத்தொடரின்
கனிவறிந்தும் பணிவறிந்தும், கையும் வாயும் மணக்கும்வகை மேற்கொண்டார்;
மரபளித்தோம் எனும் நிறைவிற் கெல்லை காணேம்
208
| 20