இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
கலையெல்லாம் அழகென்றே
கற்பழிக்குங் கடுஞ்செயலுங் கலையாய்க் காட்டி, விலையாக இளைஞர்தம்
வீறெல்லாம் குலைக்கின்ற விளைச்சல் கண்டேம்; மலையெல்லாம் கல்லெனினும்
எரிமலையுங் கற்குழம்பே மலைவாழ் வாமோ? இலையெல்லாம் பசுமையெனில்
பசுமையெலாம் இலையாகும் பான்மை காணேம்.
219
வழிவழியாய் வருகின்ற
வளமார்ந்த பெருஞ்செல்வர், வளமை இல்லார்;
எழில்வழியில் புகழ்பெற்றே
ஏறுவதைக் கீழறுப்பால் இடறல் கண்டேம்;
வழிவழியாய் வளர்கின்ற
. வளமரங்கள் தமைச்சார்ந்து வளர்வ தற்குக்
குழியேறி வருகின்ற
கொடியதனைக் கீழறுப்பாய்க் கொய்யக் கானேம், - 220
! 26