இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
செஞ்சொற்கள், சுவை ஆழம்
சேர்பொருள்கள், குரல்மிடுக்கு, செவிசாய்ப் போரை நெஞ்சத்தால் நோக்கமிடல்,
நெறிமேடை நாகரிகம், நிகழ்ச்சி யாளர்
கிஞ்சிற்றும் குறைபடாமை,
குறிக்கோள்கொள் சொற்பொழிவும் பணியாய்க்
கண்டேம்;
விஞ்சுகுரல், வெற்றளப்பு,
வீண்கதைகள் சொற்பொழிவில் விரித்துக் காணேம். 227
கலப்புமணம் சாதிச்சாக்
கடைபோக்கும்; கரணமின்றிப் பெரியார் கண்ட நலப்பெருஞ்சீர் திருத்தமன
நற்றலைமைப் பணியேற்று, மரபை நன்கு புலப்படுத்தி, நெல்முல்லைப்
பூச்சொரிந்து பலநூறு புரிந்து கண்டேம்; குலப்பெருமை கொண்டு.தமிழ்க்
குடிப்பெருமை குலைத்தபுரா ணத்தீ காணேம்.
228
|30