இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை . இளஞ்சேரன்
அறிவுடையம் யாம்'என்றே அகந்தை கொள்ளின் அறியாமை அஃதே'என் றறையும் முப்பால்; செறிவுடையார் இஃதுணர்ந்து செருக்கு நீக்கில் செழித்துவரும் வெற்றியதன் படின் றாகும்: அறியாமை தனையறிதல், அடுத்த வர்தம் அறிவறிதல், செருக்ககற்றல் எனுமிம் மூன்றும் அறியாமை அகற்றிவெற்றி பெறுவ தற்கே
அரும்படைகள்; அவை மனிதற் கமைதல் நன்றாம்.
- 322
அறிவிருந்தும் திறமிருந்தும் அவற்றின் பாங்கால் அடைவாழ்வை அடையாமல் அவலங் கொள்ளப் பொருளியலால், பிறப்பதனின் உயர்வு தாழ்வால் பொதித்தழுத்திப் பொக்கையராய்ப் 4ಆಹಹ லாக்கி மருளவைத்தார் செல்வத்தார், மதத்தின் பாலார்; மற்றிவற்றை அறிவிருந்தும் அறிதற் கேற்ற
தெருளமைந்த சூழல்இல்லா நிலையால் பல்லோர்
தேக்கமெனும் அறியாமைத் திசையில் உள்ளார்.
. 323
|64