பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

49, ஏட்டுச் சுரங்கங்காள்!

நூல்களை இயற்றிட அறிவுளிர்,

நூல்களில் புதியன இயற்றுவீர்! நூல்களாய்ச் சிறுகதை, பெருங்கதை

நூற்பதை அளவொடு நிறுத்துவீர்!

நூல்களாய் அகநூல், அறிவுநூல்,

நுண்கலை வானநூல், வாழ்வுநூல், நூல்வர லாற்றுநூல், உழவுநூல்,

நூவலுவீர், தமிழ்மொழி ஒன்றினால்!

370

தொழிலுக் குயர்வுநூ ல், பாடநூல்,

தொன்மைப் பொருளுறு நூல்களும், எழிலுக் குரிய பல் நூல்களும்,

எளியோர் வாழ்வகை நூல்களும், இழிவினை எரித்திடும் ಠTಖಹ@ಹಿ,

இனநலம் உயர்த்திடும் நூல்களும், ஒழிவிலா தியற்றுவீர்; அறிஞரீர்!

ஒழுக்கமே நூல்களால் பரப்புவீர்!

37 |

| 99