இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
50. களஞ்சியத்தில் கறையான்கள்.
உறைந்திட்ட தமிழகத்தின்
உயர்வறிஞர் தமிழர்க்கே உரைத்திட்டார் உரைகல்லில்
உரைத்தெடுத்த நற்பொருளை: 'உரைவகுப்பேன் என்றுசில
உரையாளர் உரையெழுதி உறையினின்று வாளுருவி
உடல்குறைத்தார் தமிழினுக்கே.
376
தொல்காப் பியம்என்னுந்
தமிழ்வரம்புத் தொன்னூற்கு நல்லுரைகள் முன்னிருக்க
நச்சினார்க் கினியனெனும் பொல்லாத ஒருபுலவன்
புகுந்திட்டே உரையெழுதி, இல்லாத புகுத்தமைத்தே
இழிவளித்தான் தமிழர்க்கே.
377
202