பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

50. களஞ்சியத்தில் கறையான்கள்.

உறைந்திட்ட தமிழகத்தின்

உயர்வறிஞர் தமிழர்க்கே உரைத்திட்டார் உரைகல்லில்

உரைத்தெடுத்த நற்பொருளை: 'உரைவகுப்பேன் என்றுசில

உரையாளர் உரையெழுதி உறையினின்று வாளுருவி

உடல்குறைத்தார் தமிழினுக்கே.

376

தொல்காப் பியம்என்னுந்

தமிழ்வரம்புத் தொன்னூற்கு நல்லுரைகள் முன்னிருக்க

நச்சினார்க் கினியனெனும் பொல்லாத ஒருபுலவன்

புகுந்திட்டே உரையெழுதி, இல்லாத புகுத்தமைத்தே

இழிவளித்தான் தமிழர்க்கே.

377

202