இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
உவகைதனிற் கிளைக்குந் தூயவள்.
6s.
தனதத் தனதனன தனதத் தனதனன
தனதத் தனதனன தானனன் - தன தனதத் தனதனன தானனன் - தன தானதானன தானதானன தானதானன தானதான ன
தனதத் தனதனன தானனன் - தன தனதத் தனதனன தானனன்.
- சந்தக் குழிப்பு
உயிரிற் கலந்து நறும் உணர்விற் தெளிந்துலவி
உடலிற் படிந்தமைந்த தாயிவள் - உயர் உவகை தனிற்கிளைக் குந் தூயவள் - இள வேனிலோதெளி தேனிதோவெளி வானிலுரர் மதி
தானிதோவென உவமை யினிற்கனிந்து மேயவள் - எம துணர்வும் உளமுந்தவழ் யாயவள்; வெயிலிற் பிரிந்து நிலம் வினையுற் றியங்குமுனம்
வெளியிட் டியம்புசொலின் தொன்மையள் - நயம் விளையச் சுவை புகலும் மென்மையள் - இறைத் தூயதாமுதல் வாயதாமென மேயதாநயந்
தோய்வதாமென விழையத் தனித்தியங்கு தன்மையள் - பகை
விலகத் தகர்த்தெறியும் வன்மையள்;
244