பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்

அண்ணா! நான் என்னென்பேன்
ஆணவத்தை' என்றலறிக்
கண்ணம்மா என்றதங்கை
கண்பிசைய - 'என்னம்மா!(10)

ஏன்தங்காய் ஓலமிட்டாய்?
இன்னலெதும் நேர்ந்ததுவோ:
நான்தீர்ப்பேன் கூறென்றே
நாவுதிர்த்தான் - மான்விழியாள்

நீர்நிறுத்திக் கண்களையும்
நேர்நிறுத்திச் சொல்லுதிர்த்தாள்:
வேர்க்கின்ற நெஞ்சகத்தே
வேற்கண்ணான் - ஏற்கின்றான்;

'மந்தைக் கரைக்கே
மறுதோன்றி கொய்கின்ற(15)
சிந்தையொடு கைவீசிச்
சென்றஎனை, -அந்தவழி

259