இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
'தன்விரலைத் தான் இயக்கத் தெரியா மூடன் தோய் இன்ப யாழ்இயக்க வல்லான் கொல்லோ'
(124) இது போன்ற பல உவமைகளைக் காண முடிகிறது. உருவகமாக எழுதுவதிலும் கவிஞர் பின்னடையவில்லை.
"திருக்குறளின் அறத்துப்பால் நெற்றி: திகழ்கின்ற பொருட்பாலோர் மூக்காம்; உருக்குகின்ற காமப்பால் விழிகள்'-என்று (11)
அடுக்குவதிலிருந்து,
"வெள்ளைத்தாள் புதுப்பானை, விழைவே
- ..., வெண்ணெய்; விளைகருத்தே கற்கண்டாம்; அணிகள் பாகாம்; . எண்ணியநல் எழுத்தரிசி, சொல்லே சோறாம்'
- (357)
-என்று கவிதைப் பொங்கல் படைப்பது வரை உருவக மயந்தான். வாழிய கவிஞர்தம் திறம்!
சில கதைகளை விரிவாக்கினால் அவை குறுங்காப்பிய மாகவே விளங்கும். கவிஞர் கவனம் செலுத்தினால் பல காப்பியங்களை உருவாக்கலாம். தமிழுக்கு அத்தகைய
வரவு வாய்க்கட்டும். - -
சொல் ஆய்வும் ஆட்சியும்
கவிஞர்தம் உரைநடை நூல்களிலும் தம் சொல் ஆராய்ச்சித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையிலும் அததகைய சொலலாராய்ச்சியில் ஈடுபடத் தவறவில்லை.
[29]