இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
65. நீரோட்டம்.
ஆடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் துர்தொறும் நண்ணுவர்" எனப்பெரும்
படையுடைப் பாண்டியன் பகர்ந்த நிலையினை ஆடைந்தேன், யானுமோர் அவலப் பெண்ணே. சிறந்தபல் பொருள்களுஞ் சீர்த்தியுங் கொண்டதே பிறந்தகம் எனக்கு,நான் புக்கக மோவெனில் மறந்திடா துள்ளளவும் மதிக்க இடுவதைக் கரந்திடும், முத்தையுங் கனிந்திடும் இடமதே. எவ்விடம் பிறந்தென் எவ்விதஞ் சிறந்தென்? செவ்வி ஒழியவே சிக்கெனத் துன்பம் கவ்வி உடலெலாங் கருகிட, வாழ்வினைக்
கவ்விட ஆயினேன், கனலின் மெழுகதே.
இன்னுமென் துயரினை இயம்பிட முற்படின் மின்னும்உம் கண்களோ அருவியை ஈன்றிடும்; குன்றும்என் நிலையால் குன்றொடு கொடுமையும்
கன்றும் கேளும்,என் கதைக்குடங் கவிழ்ப்பனே:
279
505
506
507
508