இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கவிதைகள்
68. பொதுமை திகழும்
புதுமை நிகழும்.
தமிழிற் கவிஞர் தகவிற் பெரியர்;
தருநற் சுவையில் தமிழே யனையர்;
தமிழப் புலவர் தம்மிற் சிலம்பீன்
தவமார் இளங்கோ தகவே பகைர்வேன்:560
வளமை, எளிமை, இனிமைச் சொல்லால்
வற்றா ஊற்றாம், வடித்த சுவையாம்
இளமை எழிலாம், முதுமை அறிவாம்,
இளமென் கதிராம் இளங்கோ கவியே!561
இயலே வனைவாய், இசையே ஒலியாய்,
இனிமைக் கூத்தே இடையார் பரலாய்,
கயலே யனைகண் ணகியார் பொருளாய்க்
கவினார் புலவன் கவிதேர் சிலம்பே.562
295