இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
69. பொன்றாப் புகழில்
புதுக்கிய கொற்றன்.
தஞ்சைப் பெண்ணே! தஞ்சைப் பெண்னே!
நன்செய் அணிகொள் தஞ்சைப் பெண்னே! நின்தாய்ச் சோழ நீள்நா டதனைப் பொன்றாப் புகழில் புதுக்கிய கொற்றன் ஒருவனோ? அல்லன் பல்லுருத் திறலினன்: (5)
அருஞ்சோழ நாடதைப் பெருஞ்சோழ நாடென அடற்போர் வலியால் ஆக்கியும் ஊக்கியும்,
கடற்படை கண்டு கடாரம் கொண்டும்,
சிங்களப் பிடரியைச் சிதைத்த சிறுத்தைத் தன்கொடி உயர்த்திய தறுகண் மறவன்; (10) பெருநிலம் அளந்தகோல் பிடித்த கோலன்; நாடு பகுத்து வகுத்த கணக்கன்; குடத்தின் ஒலைதேர் குடிமக்க ளாட்சி நடத்தி நிறுத்திய மக்கள் தலைவன்;
300