பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பலதிக்கும் அவ்வுணர்வைப் பரப்பல் வேண்டும்;

பல்லுலக மக்கள்பறந் தோடி வந்து கலங்கலமாய் அதையள்ளிப் பருக வேண்டும்;

கவின்மாந்தத் தன்மை அதால் நிலைக்க வேண்டும். - 578

தனிமாந்தன் முதன்முதலாய்த் திருந்த வேண்டும்:

தான்தாயாய் ஒக்கல்சேர்த் தனைக்க வேண்டும்; கனிவன் பால் ஊரவரைத் திருத்த வேண்டும்;

கடவுளதைப் பேரொளியாய்க் காட்ட வேண்டும்; இனியதமிழ்ப் பெம்மான்எம் இராம லிங்கர்

இயம்பிய நல் வழிச்சங்கம் இஃதே அன்றோ? நனிஉவப்பால் இதற்குழைத்து நல்லோர் வாழ்க!

நலமெல்லாம் மிகப்பரப்பி நீடு வாழ்க!

579

303