இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
பலதிக்கும் அவ்வுணர்வைப் பரப்பல் வேண்டும்;
பல்லுலக மக்கள்பறந் தோடி வந்து கலங்கலமாய் அதையள்ளிப் பருக வேண்டும்;
கவின்மாந்தத் தன்மை அதால் நிலைக்க வேண்டும். - 578
தனிமாந்தன் முதன்முதலாய்த் திருந்த வேண்டும்:
தான்தாயாய் ஒக்கல்சேர்த் தனைக்க வேண்டும்; கனிவன் பால் ஊரவரைத் திருத்த வேண்டும்;
கடவுளதைப் பேரொளியாய்க் காட்ட வேண்டும்; இனியதமிழ்ப் பெம்மான்எம் இராம லிங்கர்
இயம்பிய நல் வழிச்சங்கம் இஃதே அன்றோ? நனிஉவப்பால் இதற்குழைத்து நல்லோர் வாழ்க!
நலமெல்லாம் மிகப்பரப்பி நீடு வாழ்க!
579
303