பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் உணர்வில் அவள்

உள்ளுணர்வில் அன்பதனை திறந்த

ஊற்றுணர்வைக் "காதல் என உரைத்தால்

எள்ளளவும் அதிற்குறைவே. இல்லா - ஏந்திழையாள் என்னுளத்தே இன்பப் புள்ளிவைத்துக் கோலமிட்டாள்; அவள்,நான்

மச்சூட மாலையிடும் பூவை: வெள்ளமென எனையணைப்பாள்; காதல்

வெள்ளோட்டத் தனில்,அவளே வெல்வாள்.

பெண்மையிலே சித்திரையின் நிலவு:

பெறும்எனக்கோ பத்தரைமாற் றுயர்வே; உண்மையிலே முத்திரைகொள் அழகே;

உறும்எனக்கோ புத்துணர்ச்சி உறவு; தன்மையிலே தமிழ்மரபுத் தலைவி;

தனைஎனக்கே தத்துவைத்த துணைவி; நுண்மையிலே புத்தகம்:என் நினைவாம் -

நீரோட்டந் தனில்,அவளே நிறைவாள்.