பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

12. அந்த ஒலி!

೨ಫಿಕ9ಣಿ, பஞ்சாலைச் சங்கொலித்த

அமுதஒலி, உழைத்தவர்க்கோ அன்பொலியாம். சிந்துபாடிப் புறப்பட்டான் சிவக்கொழுந்து,

சிறகடித்து வலைப்பறவை பறந்ததென. வந்துசேர்ந்த தோழர்கள் குரலெடுத்து

'வரவேண்டும் பொதுவுடைமை' எனவொலித்தார், அந்தஒலி, இவன்குலத்து வாழ்வொலியாம்;

'அஃதென்றோ என்றேங்கி வீடடைந்தான். 49

ஆடோட்டி வந்ததங்கை அண்ணவென்றாள்;

'அண்ணியெங்கே என்றவிழ்த்தான் ஆத்திரத்தை; ஓடோடி வருகின்றேன் என்றுரைத்தே

ஒடியுளாள் குடமெடுத்தே எணமுடித்தாள் ; பேடோடு பேசுதற்குத் துடித்தமனம்

பேதுற்றுப் படபடென்றே அலறுகையில் காடோடி மானெனவே குதித்துவந்தாள்:

கைவளையல் வரவுசொல்லி ஒலித்ததங்கே!

50

32