இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை, இளஞ்சேரன்
இதுபோன்றே கவிஞர் கோவை. இளஞ்சேரன் கவிதைகள் காணப்படும் பாடுபொருள்களும் சிறந்துவ விளங்குகின்றன.
பாரதியைப் பற்றிக் குறிப்பிடும்போது,
"நெஞ்சக் கூட்டை நெகிழ்த்து நிறைந்த செஞ்சொற் கவியின் செங்கோல் வேந்தே" ---என்று தமது கவிதை வரிகளில் காட்டும் உணர்வு நெஞ்சைத் தொடுகிறது. இத்தகைய சிறப்பான கவிதைக் கூறுகளை இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது.
இனிய எளிய தமிழில் இதயங்கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகள் நிச்சயமாகத் தமிழ் உலகில் வரவேற்கப்படும் என நம்புகின்றேன்.
பல நூல்களை எழுதி வெற்றிபெற்ற இக்கவிஞரின் இக்கவிதை நூலையும் தமிழ் மக்கள் படித்து இன்புறுவார்களாக!
திரு கோவை. இளஞ்சேரன் மேலும் மேலும் இத்தகைய கவிதை நூல்கள் பல படைத்துத் தமிழுக்கு வளம் சேர்க்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் உரியன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் (ஒ-ம்) ச.அகத்தியலிங்கம்
தஞ்சாவூர்
[6]