பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க. அயோத்திதாளலப் பண்டிதர் செய்யாதவர்களாதலின் திகைத்து நிற்பதும், வேஷப் பிராமணர்கள் கூறிய வண்ணம் தேங்காய் பழம் தட்சனைக் கொண்டுவரா திருப்பதுமாகியக் குடிகளின் குணனுபவங்களை யறிந்த வாரியர்கள் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சிவாலயங்களுள் பூர்வகாலத்தில் புண்டரீக பூரியென்றும், தற்காலம் பூரியென்றும் வழங்கும்படி யான வியாரத்துள் தங்கியிருந்த சமண முநிவர்களை தங்கள் வலைக்குட்பட்ட சிற்றரசர்களைக் கொண்டு விலக்கிவிட்டு, அவற்றுள் தங்களுக்குப் பிரியமான சிலைகளை யடித்து கூடமத்தியிலமைத்து அதனடியிற் காந்தக்கற்களைப் புதைத்து இரும்பு தகடுகளில்ை தட்டுகள் செய்து குடி களை தேங்காயுங் கனிவர்க்கங்களுந் தட்சணை தாம்பூல புட்பமும் கொண்டு வரச்செய்து தாங்கள் செய்து வைத்துள்ள இரும்புத்தட்டில் வைத்து குடிகளின் கைகளிற்கொடுத்து நீங்களித்தேவனை நோக்கி வேண்டிய வற்றைக் கேளுங்கள். உங்கள் மீது அத்தேவனுக்குப் பிரியமாயின் நீங்கள் கொண்டுவந்துள்ள பூசை திரவியங்களை உடனே யிழுத்துக் கொள்ளுவார். உங்கள் மீது பிரியமில்லா விடின் இழுத்துக் கொள்ளமாட்டாரென்று வேஷ ப் பிராமணர்கள் கூறவும் அவற்றைக் கேட்டுக்கொண்ட குடிகள் இரும்புத்தட்டில் வைத்துள்ள தேங்காய்ப்பழ முதலியவைகளை யெடுத்து காந்தம் புதைத்து வைத்துள்ள சிலாரு பங்களின் அருகிற் செல்லுவதற்கு முன் காந்தக்கல் இரும்புத் தட்டுகளை யிழுத்துக் கொள்ளும்போது கல்வியற்றப் பேதைக்குடிகள் பயந்து வேஷப்பிராமணர்கள் வாக்கை தெய்வ வாக்கென் றெண்ணி பூர்வ சத்தியச் செயல்களை மறந்து அசத்தியச் செயல்களிலாழ்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு சுட்டுத்தின்னும் படு பாவிகளின் சேர்க்கையால் கொலைத்தொழிலைக் கூசாமற் செய்யவும், அகிம்சாதன்மத்தை மறக்கவு மாரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் வரைந்து வைத்துக்கொண்டுள்ள கட்டுக்கதைகளில் அவர்களுடைய ரிஷிகள் திருடுவதற்குப் போம்போது நாய் குலைக்குமால்ை அதன் நாவைக் கட்டுவதற்கு மந்திரஞ் செய்வதாகக் குறிப்பிட்டு வழங்கிவந்தவர்களாதலால் அவர்களையடுத்த இத்தேசக் குடி களுங் கூசாமல் திருட வாரம்பித்துக்கொண்டார்கள். அவர்களேற்படுத்திக்கொண்டுள்ள தேவதாக் கதைகளில்