பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 95 சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குப் பராயரானவர்களும், எதிரடை யானவர் களும், பொய் வேஷங்களை சகலருக்கும் பறைகிற வர்களுமான பெளத்த தன்ம விவேகிகளைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை யடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலை யெடுக்க விடாமல் நசிக்கத்தக்கயேதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய் பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங் களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுபெறச் செய்து வருகின்றவர்கள் உம்மெயும் உமது அரசாட்சியையும், உமது தேசக் குடிகளையுந் தங்களது பொய் வேஷங்களால் வசப்படுத்திக்கொண்டு பெளத்த தன்மங்களை யழிப்பதுடன் பெளத்தர்களையுந் தாழ்ந்தசாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் பாழ்படுத்துவதற்கு வந்திருக்கின்ருர்கள். நீவீ ரிவர்களது பொய் வேஷங்களுக்கும், பொய் ப் போதகங்களுக்கும் உட்படாது விசாரணையிலேற்பட்டது போல் மற்றய வித்தேச வரசர்களும் விசாரினையால் தெளிந்திருப் பார்களாயின் நெடுங்காலங்களுக்கு முன்பே இப்பிராம்ண வேஷத்தை விடுத்து தங்கள் சுயதேசத்திற் போய் சேர்ந்திருப் பார்கள். தங்களைப்போன்ற வித்தகைய விசாரணை யிராது மற்றுமுள்ள வரசர்கள் இப் புருசிகரது ஆரியக்கூத்திற்கும் பிராமண வேஷத்திற்கும் உட்பட்டு அவர்களது போதனைகளை நம்பி மோசம்போனபடியால் பல தேசங்களிலுமுள்ள பெளத்த தன்மங்களு மழிந்து பெளத்தர்களுந் தாழ்ந்தசாதிப் பறையர் களென நிலைகுலைந்து வருகின்ருர்கள். தாங்கள் இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் நம்பாது அவர்களையும் விரோதித்துக் கொள்ளாது யாசகமாகக் கேழ்க்கும் பொருட்களை யேதேனு மீய்ந்து உமது தேசத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி யான யேதுவைத் தேடவேண்டியது. அங்ங்னமின்றி விஷப்பூச்சுகளை அடி மடியிற் கட்டி வைத்திருப்பதுபோல் இம்மிலேச்சர்களை உமது நாட்டிற் குடிக்கொள்ளவைத்து விடுவீராயின் அவர்கள் பொய்யைச்சொல்லி வஞ்சிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் நீர் பொருளளித்து போவித்து வருவீராயின் தக்களையுந் தங்க ளரசையும் மிக்கக் கொண்டாடி பொருள் சம்பாதிக்கு மேதுவில்