பக்கம்:சகுந்தலா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 3巫 எப்படியும் தொலேயட்டும் அடுத்த வீட்டு சகுந்தலா அம். மையார் தான் ஆண்வாடை விரும்பாத அல்லி ராணி மாதிரி நடந்து கொள்பவளாயிற்றே; இப்போ மட்டும் இங்கே ஆள னுப்புவானேன்? - இந்த எண்ணத்தைத் தொடர்ந்தது. சிரிப்பு. - பின்புறம் போய் ஜன்னலருகில் நின்று வேடிக்கை பார்க்கலாமா? என்று நினத்தான் அவன். செச்சே, அது கூடாது. அவள் பார்த்தால், என்ன நினைக்க மாட்டாள்?" என்று கண்டனக் குரல் கொடுத்தது ஒரு மனம். ! நினேக்கிறதை நினைத்து விட்டுப் போகிருள் ! அவள் மறைந்து நின்று பார்க்கவில்லேயா!' என்று ஆசை தூண்டி யது. அவன் ஆசையைக் கெடுக்க விரும்பவில்லை. முன்பக் கத்துக் கதவைத் தாளிட்டு விட்டு பின் கட்டுக்குச் சென்று ஜன்னலோரத்தில் கின்று கவனித்தான். புதிதாகப் போட்டிருந்த வேலி அவன் பார்வைக்கு ஒரு. தடையாகத் தானிருந்தது. அடுத்த வீட்டுக்காரியின் முழு. உருவத்தையும் நன்ருகக் கவனிக்க விடாமல் தடுத்தது அது, அடிக்கடி அழகிய கைகள் தெரியும். உடலின் ஒரு பகுதி தெரியும். சில சமயம் அவள் அங்கு மிங்கும் நகர்ந்து, பாதாளக் கரண்டி கட்டிய கயிறை அசைத்து ஆட்டிச் சிரமப் படும் பொழுது, அவள் முழுத் தோற்றமும் பளிச்சிடும். சிவந்த அவள் முகம் உழைப்பினல் அதிகம் சிவந்து தோன் றும். சிற்சில கோணங்களிலே அவள் ரொம்பக் கவர்ச்சி கரமாகத் திகழ்கிருள் என்று கினைத்தான் ரகுராமன், r

  • பாவம், ரொம்புக் கஷ்டப் படுகிருள். இதென்ன செடி நடுவதைப் போலவா! அல்லது, நட்ட செடியைப் பிடுங்கி எறிகிற மாதிரியா! இதிலே இவளுக்கு அனுபவ மில்லே என் பது தான் நன்ருகத் தெரிகிறதே! என்று கனத்தது அவன் மனம். y 总

பரிதாபமாகத் தானிருக்கிறது. நான் போய் வாளியை எடுத்துக் கொடுக்கலாம். ஆனால், அவள் அதை விரும்ப மாட்டாள்!' என்ற எண்ணமும் எழுந்தது. அடுத்த வீட்டுச் சகுந்தலே அலுத்துப் போனுள். தலே கிமிர்ந்து பெருமூச்செறிந்தாள். அவள் முகத்தில் வேர் வைத் துளிகள் படிந்திருந்தன. அவளது முகம் திரும்பு வதைக் கவனித்த ரகுராமன் சடக்கென்று அறையினுள் உள்வாங்கிப் பதுங்கிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/33&oldid=814784" இலிருந்து மீள்விக்கப்பட்டது