பக்கம்:சகுந்தலா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 33 சகுந்தலே பரபரப்பாகச் சொன்னுள் : ஏட்டி உலகு, ே அதைக் கொண்டு போய் கொடுக்க வேண்டாம், அடுத்த வீட்டிலே அவர் இருந்தால், வாளியை எடுத்துக் கொடுக்க முடியுமான்னு கேளு, போ. வேறே முக்கிய வேலே ஏதாவது செய்துக்கிட்டிருந்தால், அதைப் போட்டு விட்டு வரவேண் டாம்னும் சொல்லு' இதை அவள் உரக்கவே தான் கூறினுள். பக்கத்திலேயே அடுத்த விட்டின் பின் கட்டில், சுவரின் பின்னல், ரகுராமன் நிற்பான்; தனது சொல்லேயும் செயலேயும் கவனிக்கும் அதி முக்கிய அலுவலில் தான் அவன் ஈடுபட்டிருப்பான் என்ற சந்தேகம் அவளுக்கு எழ நியாயமில்லே தான். அதனுல் தான் அவள் அவ்வளவு தாராளமாகச் சத்த மிட்டுச் சொன் ளை. அருமையான காப்பியும் அதையடுத்து இனிய ஐஸ்க்ரீ மும் கிறையவே சாப்பிட்டது போலிருந்தது அவனுக்கு. அப் பொழுது பிறந்த உணர்ச்சித் துள்ளவினால், உற்சாகத் துடிப் பிஞல், உந்தப் பெற்று அப்படியே கதவைத் திறந்து கொண்டு நானுச்சு!! என்று பாய்ந்து விடலாமா என்றிருந் தது. அறிவு தடை விதித்தது. அவ்விதழ் செய்தால், தான் இதுவரை அனுஷ்டித்த ஜாக்கிரதை முயற்சிகளுக் கெல்லாம் அர்த்தமே கிடையாது, பயனுமில்லை. சின்னத்தனம் படைத் தவன் என மற்றவர்கள் எண்ண இடமேற்பட்டுவிடும் என்று அறிவு எச்சரித்தது. ஆகவே அவன் பூனே போல நகர்ந்து விட்டான் முன் பகுதிக்கு. - そ வேலேக்காரப் பெண் மறுபடியும் கதவைத் தட்டியதும் திறந்தான், என்ன, வாளியை எடுத்தாச்சா?’ என்று கேட்ட வண்ணம். 'இல்லே' என்று தலையசைத்தாள் அவள். "அப்போ, பாதாளக் கரண்டியையும் வாளிக்குத் துனே யாக, பாதாளத்துக்கே அனுப்பியாச்சாக்கும்? 'இல்லையே: ‘இன்னும் அனுப்பலேயா! ரொம்ப சந்தோஷம்! அவன் வேடிக்கையாகப் பேசுவதில் சமர்த்தன் போலி ருக்கு என்ற அபிப்பிராயம் எற்பட்டிருந்தது அவளுக்கு. அது வளர்ந்து கொண்டே போயிற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/35&oldid=814786" இலிருந்து மீள்விக்கப்பட்டது