பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்ககாலத் தமிழ் மக்கள்

30



பொதுநல வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் பெற்றன. அரசனது செல்வம் அறனும் பொருளும் இன்பமும் என்ற மூன்று பொருளையும் நாட்டில் வளர்த்தற்கு உரியது.

அரசியற்கு உறுதி கூறும் இயற்றமிழ் வல்ல புலவர்களும், இசையால் மக்களுடைய மனமாசு கழுவி மகிழ்விக்கும் இசைத்தமிழ் வல்ல பாணர்களும், உழைத்து அலுத்த மக்களுக்கு உயர்க்க கதைகளை நடித்துக் காட்டி அவர்களை ஊக்கும் நாடகத்தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரும் தம் சிறந்த புலமைத் திறத்தால் மக்களால் வரிசை தந்து நன்கு மதிக்கும் உயர்ந்த பரிசுடையராதலின், இவர்களைப் ‘பரிசிலர்’ என்ற பெயரால் தமிழர் பாராட்டிப் போற்றுவாராயினர். பிணி முதலிய காரணங்களால் எத்தகைய தொழிலும் செய்து வாழ்தற்குரிய வசதி பெறாது வறுமையால் வாட்டமுற்றுப் பிறர்பால் இரந்துண்டு வாழும் எளியவர், ‘இரவலர்’ என்ற பெயரால் வழங்கப்படுவர். பகைவர் தந்த திறைப்பொருளைக் கலைச் செல்வராகிய பரிசிலர்க்கும் ஆற்றலற்ற எளியோராகிய இரவலர்க்கும் வரையாது கொடுத்தளித்தலைத் தமிழ்வேந்தர் தம் சிறப்பியல்பாகக் கொண்டிருந்தனர். பரிசிலர் தமக்குரிய கலைத்திறத்தில் திறமை பெற்று வந்தாலும், திறமையின்றி வந்தாலும், வறுமையான் வந்த அவர்தம் பசித் துன்பத்தை உணர்ந்து அருளுடன் பரிசில் தந்து பாராட்டுதல் தமிழ் வேந்தர்களின் கடமையாகக் கருதப்பட்டது.

தீயாரை ஒறுத்தலும், நடுவு நிலைமையுடையார்க்கு அருள் புரிதலும் ஆகிய நீதி முறையில் சோம்பலின்றித் தமிழ் வேந்தர் இடைவிடாதுழைப்பாராயினர். அதனால், மாந்தர் எல்லாராலும் வெறுப்பின்றிக் கண்டு போற்றும் இறைமை (தெய்வ)த் தன்மையுடையவராக வேந்தர் நன்கு