பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

37


தன்கண் வாழ்வார் அனைவரும் பசி நீங்கி வாழ்வதற்கேற்ற குறையாத உணவுகளையுடையதே நாடெனச் சிறப்பிக்கப்படும். இவ்வுணவின் மூலமாக நிலை பெறுவதே உடம்பாகும். அதனால், பசித்தார்க்கு உணவளித்தார், உயிர் கொடுத்தார் எனப் போற்றப் பெறுவர். உணவென்பது நிலத்துடன் கூடிய நீரால் விளைவதாகும். பிற உணவுகளை விளைவித்தற்குக் காரணமாகித் தானும் உணவாய்ப் பயன்படுவது நீராகும்.

ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளிற் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நீர் நிலைகளிற்பாய்ச்சிப் பண்டைத் தமிழ் வேந்தர் நாட்டை வளம்படுத்தினர். சோழர் பெருமானாகிய கரிகால் வளவன் காவிரிக்குக் கரைகட்டி, அதன் நீர் பல கால்கள் வழியாக நாடெங்கும் பாய்தற்குரியதாக வளம்படுத்திய வரலாறு சிறப்பாகக் கருதற்குரியதாம். நெல் முதலிய விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து இருத்தலாற் பயனில்லையென உணர்ந்த சோழ மன்னர்கள், சிறப்பாகத் தங்கள் நாடு முழுவதும் ஏரி முதலிய நீர் நிலைகளை எங்கும் உண்டாக்கி உணவுப் பொருளை நிறைய விளைவித்து, தங்கள் நாட்டைச் செல்வம் நிறைந்த நாடாக்கி, ‘வளவர் ' என்னும் சிறப்புப் பெயரினைத் தங்களுக்கே உரியதாகப் பெற்றார்கள். ஆற்று வசதியின்றி மழை நீரையே எதிர்பார்த்திருக்கும் நிலப்பகுதிகளிற் பள்ளங்கண்ட இடங்களிலே ஏரிகளை வெட்டியமைத்து, மழை நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, அங்கீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தினார்கள். உரிய காலத்தில் மழை பெய்யத் தவறினாலும், முன்னர்ப் பெய்து நீர் நிலைகளில் தேங்கிய நீரால் பருவகாலத்தே