பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 சங்ககாலத் தமிழ் மக்கள்

குடி மருதனார் என்னும் புலவர் பெருமான், பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கத்தினை நல்லாசிரியர் புணர்கூட்டு ' என்ற கொடாற் குறிப்பிடுகின்றார், திருஞான சம்பந்தப் பிள்ளையார், மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தினை " மதுரைத் தொகை என ஒரு திருப்பாடலிற் குறிப்பிடுகின்றார். இத்தொடரில் வந்த தொகையென்பது சங்கம் என்ற பொருளேத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.

தமிழ்க் கல்விச் சங்கமாகிய பாண்டியன் அவையம், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்திற்கு (2,500 ஆண்டுகளுக்கு) முன் தொடங்கிக் கி. பி. இரண்டாம் நாற்றாண்டு முடிய, நெடுங்காலம் நிலைபெற்றுத் தமிழ்ப் பணி புரிந்து வந்தது. பாண்டியர்களால் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்தைப் போலவே தமிழ் நாட்டிலுள்ள பேரூர்தோறும் தமிழ் வளர்க்கும் புலவர் பேரவைகள் தமிழ் மக்களால் நிறுவப்பெற்றிருந்தன. சங்க காலத்தில் எத்துணையோ தமிழ் நூல்கள் புலவர் பெருமக்களால் இயற்றப்பட்டன. அவற்றுள் பெரும்பாலன கடல்கோளாலும், தமிழர் களின் விழிப்பின்மையினாலும் அழிந்து போயின. அவை போக, இப்போது எஞ்சியுள்ளன. சிலவே, இடைச் சங்கத்தில் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியரால் இயற்றப் பெற்ற இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும், கடைச் சங்கத்துச் சான்றேர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பனவும், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியனவும் சங்ககாலத்தில் இயற்றப் பெற்றனவாக இப்பொழுதுள்ள தமிழ் நூல்களாம். இந்நூல்களை - ஆராயுங்கால் சங்ககாலத் தமிழகத்தின் பரப்பும், அரசியலமைதியும், நாகரிக வாழ்வும் நன்கு புலனாம். அவை ஈண்டு உரைக்கப்படும்.