பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 41

வரத்துக்கு ஏற்றவாகின்றன............வங்காள மாகாணத்தில் அடங்கியுள்ள வச்சிரமகத, நாடுகளுக்கு வெகுதுார மில்லாத தாய், இமயத்தைக் கடந்து செல்வதற்கு ஏற்ற வழியுடைய பிரதேசங்களுள் வலிக்கிம், புட்டான்களுக்கு இடையில் உள்ள கணவாய்களே சிறந்தவை. வலிக்கிம் ராஜ்யத்துக்குக் கிழக்கே, அதற்கும் திபெத்துக்கும் உள்ள எல்லேயை வரை பறுத்த கிற்கும் மலைத் தொடரானது செங்குத்தாய் ஆகா சத்தை அளாவிக் கொண்டு பெருங்கோட்டை மதில்போல் நீண்டு செல்கிறது; இம் மலைத்தொடரை அடுத்துச் செல் லும் கணவாய், சமுத்திர மட்டத்துக்குமேல் 14,500 அடி உயரமுடையதாய், திபெத் பிரதேசமாகிய சும்பிப் பள்ளத் தாக்கிற்குக் கொண்டுபோய்விடக் கூடியது ; இம்மலைக்கும், இதனேயடுத்த கணவாய்க்கும் வழங்கும் பெயர்கள் கவனிக் கத் தக்கன ; சோழ மலைத்தொடர் (Chola Range), சோழர் கணவாய் (Chola Pass) என்பன அவற்றிற்கு இன்றும் வழங்கி வரும் நாமங்களாம் : ((a) imperial gazetteer of India ; Sikkim ; Vol. 10: Page 327 : Vol. 22: Page: 365, (b) Hand gazetteer of India; Chola pass. (C) Encyclopaedia Brittannica: Sikkim Wol 5: P : 667; Wol 20: P. 640.) மேற் கூறியவற்றைக் கொண்டு கோக்குமிடத்து இமயப்பகுதி யொன்றற்கு வழங்கும் இப் பெயர் சோழன் தொடர்புபற்றி வந்ததாகக் கூடாதோ என்பதே என் ஆராய்ச்சி. இம் மலையடியாகவே, இதனை யடுத்துள்ள கணவாயும் அப் பெயர் பெற்றதாக வேண்டும். சோல் ' (Chola) என்பதற்கு வலிக்கும், திபெத் பாஷைகளில் வேறு பொருள் இருப்பதாகத் தெரிய வில்லை ; லா’ என்பதற்குத் திபெத் பாஷையில் கன வாய் என்ற பொருள் உண்டு. நது-லா (Natu-ta), ஜெலப்-லா (jelap-la) எனக் காண்க. ஆனால், சோல” (Chola) என்பது அவ்வாறு இரு சொல்லுடையதன்றி, ஒரு சொல்லாகவே மலைக்கு வழங்கிவருவதும், அச்சொற்கு வேறு பொருள் காணுமையும் நோக்கத்தக்கன ; அதனல் திருமாவளவன், அப்பிரதேசத்தைக் கைப்பற்றி ஆண் டுள்ள மலைச்சிகரத்தில் தன் புலிப்பொறியை நாட்டி,