பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 79

அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்

இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே ;

அதனல், ஒழிக. கில் அத்தை மின்மறனே.”

(புறம் : உகக.) மக்கள் செயலால், மன்னன் மனம் குன்றின்ை ; மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே,” என்று எண்ணினுன் ; சோழன்பால், அவன் மக்களே படை கொண்டு சென்றனர் என்ற பழிச்சொல், ஏனேப் பகை வேந்தர்களாகிய சேர, பாண்டியர் செவியுட் சென்று புகு முன்னரே, 登_ &g ö வாழ்வினின்றும் விடைபெற்றுக் கொள்ள விரும்பினுன் ; வடக்கிருத்து உயிர் துறக்கத் துணிந்தான்் ; கன் உள்ளக் கருத்தினேத் தன் புலவ நண்பர்களுக்கு உணர்த்த விரும்பி, அவர்களே அன்புடன் அழைத்து, 'அறிவுடைப் பெருமக்களே ! யானே வேட்டை மேற்கொண்டு சென்றவன், தன் வேட்டம் கப்பாது வாய்க்க யானையொடு வருதலையும், சிறிய பறவை வேட்டை மேற்கொண்டு சென்ருேன், அதுவும் கிடைக்கப்பெருமல் வறிகே மீள்வதையும் உலகில் காண்கிருேம் உள்ளுவ எல்லாம் உயர்வுடையவே உள்ளும் கல்லோர்க்கு ஆகூழ் உண்டாயின், அவர் உம்பர் உலகம்புக்கு அவ்வுலக இன் பத்கை நகர்கலும், அவ்வும்பர் உலகத்திலும் மேலாம் வீட்டுலகடைந்து பிறவாப் பெருநெறி அடைதலும் உண்டாம் ; அத்தகைய பேரின் பகிலே உருதுபோயிலும், உலகுள்ளளவும் நிற்கும் உயர்க்க புகழ்பெறுதல் உறுதி ; ஆகவே, கல்வினையினை எண்ணியபோதே செய்வர் அறி வுடையார்; அவ்வறிவு வாய்க்கப் பெரு தாரே, நல்வினே செய்யவேண்டுமா ? இன்னும் சின்னுட் கழித்துச் செய்த லாகாதர கல்வினை சிறிது செய்தல் போதாதா செய்வன எல்லாம் நல்வினையாகவே இருத்தல் வேண்டுமா ? என் றெல்லாம் ஐயப்பாடுற்று அவற்றில் தெளிவேதும் பெற மாட்டாமல் வருக்துவர்; யான் அத்தகைய தெளிவிலா அறிவுடையோ னல்லேன் ; ஆகவே வடக்கிருந்து உயிர் விடலாம் கல்வினையினை இன்றே மேற்கொள்ளத் துணிந்து

விட்டேன்,” என்று கூறினன்.