பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் 25

னின்றும் தெளிந்த கல்வியைப் பெறல் இயலாது; ஆகவே, பணிந்து, பின்னின்று, பெரும் பொருள் கொடுத்துப் பேணிக் கற்றல் வேண்டும்” என்று அதற்கு வழியும் வகுத்

துள்ளார்:

'உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.’ (புறம்: க.அக.)

ஆற்றல் மிக்க அாசய்ை, அறிவறிந்த ஆசிரியகுய் விளங்கிய நெடுஞ்செழியன், அறம் விரும்பும் செங்கோலனு மாவன்; வலியான் நலிவெய்தி முறைவேண்டி நிற்பா ரையும், வறுமையால் வாடிக் குறைகூறி நிற்பாரையும் அற் றது." அவன் நாடு; அவன் நாட்டு மக்கள், மறையொலி கேட்டு மகிழ்வதல்லது, முறை வேண்டி வந்தார் அடிக்கும் மணியொலிகேட்டு அறியார்; அவனுல் பாழுற்ற பகைவர் அவனத் தாற்றுவாேயன்றி, அவன் நாட்டு மக்கள் அவ இனத் தாற்றி அறியார், என அவன் செங்கோற் சிறப்பினைச் செவ்விதின் கூறுகிறது. சிலப்பதிகாரம்:

'மறைாா ஒசை அல்லது, யாவதும்

மணிகா ஒசை கேட்டதும் இலனே; அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது குடிபழி தாற்றும் கோலனும் அல்லன்.”

(சிலம்பு, உங்: டக - ச)

நெடுஞ்செழியன் நீதிதவருதவன்; நீதிதவறிய வழி கின்று வாழகினேயா நெஞ்சுறுதி உடையவன்; தன் அவை அடைந்து கணவன் கள்வனல்லன் என்பதைக் கண்ணெ