பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சேரர்

முரசும், குடையும், கலனும் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் துகள் தீர் மகளிர் இாங்கத் துப்பறுத்துத் தகடூர் எறிந்து நொச்சி தந்து எய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சோல் இரும்பொறை.”

(பதிற்றுப்பத்து, பதிகம் : அ) பெருஞ்சேரல் பெற்ற வெற்றிகளுள், புலவர் பாராட்டும் பெருமைவாய்ந்த மற்றொரு வெற்றி, அவன், கழுவுள் என்பானேப் பணியவைத்ததே ; கழுவுள் என்பான் ஒர் ஆயர்குலத் தலைவன் ; அரிய அரண் ஒன்றும் உடை யான் ; பேராசரோடு பகைகொண்டு போருடற்றும் இயல் பினன்; அவன் ஆணவம் அறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை, தன் படைவீரரைக்கொண்டு அவனைப் பணிய வைக்க விரும்பினுன் , இவன் படைவீரரும், அவ்வாறே அவன் அரணேத் தாக்கி, அவன் நாட்டு ஆயர்பலர்க்கும் உரிய ஆனிரைகள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர்; கழுவுள், பெருஞ்சோலிரும்பொறையின் படைவீரரை எதிர்த்து கிற்கலாற்ருளுய், அஞ்சி ஒடி, அானுட் புக்கு அடங்கி வாழலாயின ன் , தம் தலைவன், தம் ஆனிரைகளே மீட்டுத்தாரான் என அறிந்த ஆயர், கன்ருேடுகூடிய பசுக் கள் பலவற்றைப் பெருஞ்சோல் படைத்தலைவர்க்கு அளித் துப் பணிந்து கின்றனர். படைத்தலைவரும் அவர் அளித் தன எற்று, அவர்தம் ஆனிரைகளே அவர்பால் ஒப்படைத் தனர்; தன்னுட்டு ஆயர்செய்தன அறிந்த கழுவுள், * இனி வேறு செய்வதற்கில்லை ; தான்ும் பணிந்துபோதலே தக்கதாம் ' என உணர்ந்தான்் ; ஆயினும், பலர் அறியச் சென்று பணிந்து சிற்றலை நாணிற் று அவன் உள்ளம் ; ஆகவே, எவரும் அறியாவண்ணம், விடியற்காலத்தே பால் கடையுங்கால் தோன்றும் ஒலி, ஊரில் எழுதற்கு முன்பே, மறைந்துசென்று பணிந்து கின்ருன்.

' குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில் ஆரெயில் தோட்டி வெளவினை; ஏருெடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து