பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கமணி அங்குமிங்கும் ஆராயத் தொடங்கினன். சங்ககிரி அவனுடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. திப்பு சுல்தான் கோட்டைச்சுவர்களைக் காணவேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.

ஜின்கா கிணற்றுச் சுவர் மேல் தாண்டிக் குதிப்பதும், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டின்மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தது.

எல்லாரும் காப்பி அருந்தத் தொடங்கினர். ஜின்காவும் தங்கமணி அருகில் அமர்ந்து கொண்டது.

“தங்கமணி, அந்தக் குரங்கு காப்பி குடிக்குமா?” என்று கேட்டாள் பாட்டி.

“இந்தக் குரங்கு என்னவெல்லாம் செய்யுமோ அவையெல்லாம் அந்த ஜின்கா குரங்கும் செய்யும்” என்று சுந்தரம் தங்கமணியைத் தொட்டுக் காட்டிக்கொண்டு பேசினான்.

எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஜின்கா மேஜை மேல் ஏறிநின்று ஜிங் ஜிங் என்று குதித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

“நீங்கள் எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த வீட்டில் இப்படி சிரிப்பொலியைக் கேட்டு எத்தனையோ வருஷம் ஆகிவிட்டது. குழந்தைகள் எல்லாம் இப்படித் தான் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேணும்' என்றாள் பாட்டி.

[4]

தங்கமணியின் ஆர்வம் !

பாட்டிக்கு ஒரே மகன்தான் உண்டு. அந்த மகனும் உத்தியோகம் பார்ப்பதற்காக பம்பாய் சென்று விட்டார்.

12