பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தயிர் சாதம்” என்று அடுக்கிக் கொண்டே போனாள் கண்ணுப்பாட்டி.

“ஜின்காவுக்கு வடை, வாழைப்பழம்” என்றான் சுந்தரம்.

இந்தக் கோமாளிக்குத்தான் வடையும் வாழைப்பழமும் - ஜின்காவின் பேரைச் சொல்லி இவன் சாப்பிடுவான்” என்று கண்ணகி கேலி செய்தாள்.

சுந்தரம் சிரித்துக் கொண்டான். பதில் பேசவில்லை.

“பாட்டி, அந்த வண்டிக்காரன் எங்களோடு வரவேண்டாம். நாங்கள் தனியாகவே எல்லாம் பார்த்து வருகிறோம்” என்று தங்கமணி கேட்டுக் கொண்டான்.

காலையில் இட்லி, தோசை, அடை எல்லாம் பாட்டி தயார் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டதும் மலைக்குப் புறப்பட்டார்கள். வண்டிக்காரன், “நானும் வந்தால் உணவு மூட்டையை எடுத்துக் கொள்ள வசதியாக இருக்குமே” என்று, தலையைச் சொரிந்தான். இன்றும் நல்ல உணவு வகைகள் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தானோ என்னவோ?

“இல்லை, அவர்களே போய்ப் பார்த்து வரட்டும். நீ வேண்டுமானால் தனியாக ஒரு நாளைக்குப் போய் வரலாம்” என்று கண்ணுப்பாட்டி கண்டிப்பாகக் கூறிவிட்டாள். அது அவனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.


[9]

சங்ககிரிக் கோட்டை!

“அடே அப்பா எவ்வளவு பெரிய கோட்டைக் கதவு” என்று சுந்தரம் ஆச்சரியத்தோடு கூவினான்.

24