பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மட்டும் உண்டாகும். கருவில் முளை வேர் அகன்றது. இரு வித்திலைகள் சிறியவை.

இதன் மரம் வன்மையானது; செந்நிறமானது; மர வேலைகளுக்குகந்தது. மலபார், கோவை முதலியவிடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வளர்கிறது. இம்மரத்தை "வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்" என்றதற்கு ஏற்ப இம்மரம் மலைப்பாங்கில் வற்கடம் அறியாது-வஞ்சமில்லாமல் பஞ்சம் தெரியாமல் தழைத்துப் பருத்து வளரும் இயல்பிற்று. எக்காலத்திலும் பசுமையாக இலையடர்ந்து காட்சி தரும். இம்மரம் பூத்தவுடன் மலைப்பாங்கெல்லாம் இம்மலர் மணம் கமழும்.