பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சங்க இலக்கியத்

“பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே”

என்று கூறும் சூடாமணி நிகண்டு.[1]

பசும்பிடி என்பதற்குப் பச்சிலை என்றும், பச்சிலை என்பது கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்றும் கலைக்களஞ்சியம்[2] குறிப்பிடுகின்றது. ஆதலின் இம்மரத்தின் இப்போதைய தாவரப் பெயருடன் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

இவற்றால் அறியக் கூடியவை :

  1. பசும்பிடி என்பது ஓர் மரம்
  2. பசும்பிடி என்பது பச்சிலை எனப்பட்டது.
  3. இதன் கொழுந்து நறுமணம் உள்ளது.
  4. இதன் மிகுமணத்தால் இதன்பூ ‘இலைமறை பூவாயிற்று’ போலும். இதன் முன்னைய தாவரப் பெயர் ஸாந்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் (Xanthochymus ovalifolius) என்பது. இப்போது (Garcenia spicata, HK. f.) கார்சீனியா ஸ்பைகேடா என்று மாற்றப்பட்டு உள்ளதென்பர் காம்பிள் (Vol. 1: p. 53).

இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.

பசும்பிடி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : கட்டிபெரே (Guttiferae)
தாவரப் பேரினப் பெயர் : கார்சீனியா (Garcinia)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பைகேட்டா (spicata)
உலக வழக்குப் பெயர் : கொக்கோட்டை என்பர் காம்பிள்
தாவர இயல்பு : மரம், பெரும்பாலும் இதில் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும்.
இலை : தனியிலை, தோல் போல் தடித்தது.
 

  1. சூடாமணி நிகண்டு : 31
  2. கலைக்களஞ்சியம் : (IV பக் :2400)