இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
சங்க இலக்கியத்
“பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே”
என்று கூறும் சூடாமணி நிகண்டு.[1]
பசும்பிடி என்பதற்குப் பச்சிலை என்றும், பச்சிலை என்பது கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்றும் கலைக்களஞ்சியம்[2] குறிப்பிடுகின்றது. ஆதலின் இம்மரத்தின் இப்போதைய தாவரப் பெயருடன் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
இவற்றால் அறியக் கூடியவை :
- பசும்பிடி என்பது ஓர் மரம்
- பசும்பிடி என்பது பச்சிலை எனப்பட்டது.
- இதன் கொழுந்து நறுமணம் உள்ளது.
- இதன் மிகுமணத்தால் இதன்பூ ‘இலைமறை பூவாயிற்று’ போலும். இதன் முன்னைய தாவரப் பெயர் ஸாந்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் (Xanthochymus ovalifolius) என்பது. இப்போது (Garcenia spicata, HK. f.) கார்சீனியா ஸ்பைகேடா என்று மாற்றப்பட்டு உள்ளதென்பர் காம்பிள் (Vol. 1: p. 53).
இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.
பசும்பிடி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை |
தாவரக் குடும்பம் | : | கட்டிபெரே (Guttiferae) |
தாவரப் பேரினப் பெயர் | : | கார்சீனியா (Garcinia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்பைகேட்டா (spicata) |
உலக வழக்குப் பெயர் | : | கொக்கோட்டை என்பர் காம்பிள் |
தாவர இயல்பு | : | மரம், பெரும்பாலும் இதில் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும். |
இலை | : | தனியிலை, தோல் போல் தடித்தது. |