இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
113
உள்ளது. பருத்திப் பஞ்சின் நூலை நூற்கும் பெண்டிரைப் பற்றிப் பேரிசாத்தன். பேசுகின்றார் :
“பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை”
-புறநா. 125 : 1-2
இதற்குப் ‘பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற’ என்று உரை கூறுவர். நீறு பூத்த நிணத்திற்குப் பருத்திப் பஞ்சு உவமை கூறப்படுகின்றமை நோக்குதற்குரித்து (புறநா. 393).
பாரம்–பருத்தி
தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே; மால்வேலீஸ் அகவிதழ் இணையாதவை. |
தாவரக் குடும்பம் | : | மால்வேசி (Malvaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | காசிபியம் (Gossypium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஹெர்பேசியம் (herbaceum) |
தாவர இயல்பு | : | செடி கிளைத்துத் தழைத்து வளரும்; கரிய நிற மண்ணில் நன்கு வளரும்; 2-3 அடி உயரம்; பெரிதும் பயிரிடப்படுகிறது. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | அகன்ற தனியிலை; கையன்ன நரம்புகள்; இலை விளிம்பு பல. அகன்ற ஆழமான மெல்லிய இலையடிச் சிறு செதில்கள் பெரியவை; இலைக் கோணத்தில் பெரிய ஐந்தடுக்கான மஞ்சள் நிற மலர் கவர்ச்சியாகக் காணப்படும். |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள். பசியவை அடியில் இணைந்திருக்கும். |
73-8