பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் பளபளப்பானவை. அடியில் குறுகியும், நுனியில் அகன்றும் நொய்தான விளிம்புகளுடன் இருக்கும். இவற்றுள் ஓரிதழில் மட்டும் மஞ்சள் நிறம் உட்புறத்தில் விரவியிருக்கும். இதழ்கள் ஒரே மாதிரியன்று. மலர் கண்கவர் வனப்புடையது. நறுமணமுடையது.
மகரந்த வட்டம் : 10 தாதுக்கால்கள் தாதுப் பைகளை ஏந்தி நிற்கும். இவை பொன்னிறமான தாதுக்களை உகுக்கும். இவற்றுள் ஒன்று ஏனையவற்றிலும் மிக நீளமானது.
சூலக வட்டம் : 3 பகுதியானது. சூல்தண்டு முதலில் சுருண்டு இருக்கும். சூல் முடி உருண்டையானது.
கனி : 3 சிறகமைப்பையுடைய சமாரா எனப்படும். விதைகள் உருண்டையானவை. வித்திலைகள் இரண்டும் வேறான நீளமுள்ளவை.

பற்றுக்கொம்பு கொண்டு பந்தரிட்டு வளர்ப்பதுண்டு. இதனைக் கம்பர் ‘மாதவிப் பொதும்பர்’ என்பர்.