பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சங்க இலக்கியத்

தழுவு ஒட்டு முறையில் அடியில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் விரிந்தவை. தனித்தவை; தழுவு ஒட்டு முறை அமைப்பில் புல்லியிதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன.
மகரந்தத்தாள் வட்டம் : 10 மகரந்தத்தாள்கள்; தாள்கள் அடியில் செதில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 மகரந்தப் பைகள் சற்று நீளமானவை. மஞ்சள் நிறத்தாது. பொதுவாக 5 சூலறைச் சூலகம். ஒவ்வொரு சூலறையிலும் 1 முதல் 5 சூல்கள் அடி ஒட்டு முறையில் உள்ளன.
சூல் முடி : 5 பிளவு வரையில்
கனி : 5 கோணம், 5 காய்கள்; காயின் மேல் 4 கூரிய முட்கள் உண்டு. கனியுறை கூரிய முள்ளாக நீளும். இக்கனிதான் நெருஞ்சிப் பழம் எனப்படும்.
கரு : கருவில், ஆல்புமின் இல்லை. முளை சூழ்தசை உண்டு.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், கனியிலுள்ள கூரிய முட்கள், விலங்குகளின் காலில் ஒட்டிக் கொள்வதால், கனி பரவுவதற்குப் பயன்படும். அதனால் இச்செடி, எளிதாக வேறிடங்களில் பரவும்.

சைகோபில்லேசீ (Zygophyllaceae) என்ற இத்தாவரக் குடும்பத்தின் பெயரைப் பலர் நிட்ராரியேசி (Nitrariaceae) போன்ற வெவ்வேறு பெயரிட்டு அழைத்தார்கள். எனினும், சைகோபில்லேசீ என்ற முதற்பெயரே நெடுங்காலமாக நிலைத்துள்ளது.

பெரும்பாலான மரபு வழி நிபுணர்கள், இத்தாவரக் குடும்பத்தை ஜெரானியேலீஸ் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஹட்சின்சன் மட்டும் இதனை மால்பிகியேலீஸ் வகுப்பில் இணைத்துள்ளார்.