பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

147

வித்திலை : தடிப்பாகவும், சதைப்பாங்குடனும் இருக்கும்.

விளா மரமும் வில்வ மரமும் (கருவிளம்-கூவிளம்) தொன்று தொட்டு வளர்வன; இந்திய நாட்டைச் சேர்ந்தன என்பர். இவ்விரு மரங்களும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதோடு, கீழ்க்கண்ட பொதுவியல்புகளும் உள்ளன.

  1. உயர்ந்து வளருதல்
  2. முட்களை உடையதாதல்
  3. தோட்டங்களிலும், பிறவிடங்களிலும் ஒழுங்கற்று வளர்தல்
  4. வளமற்ற, வறண்ட நிலத்திலும் வளர்தல்
  5. விதைகளைக் கொண்டே வளர்தல்
  6. ஐந்தாண்டுகளில் கனி தருதல்
  7. வலிமையான கனியுறை உடைமை முதலியன.

விளவின் கனி நறுமணமும் சுவையும் உடையது. சுவைத்து உண்ணப்படுவது. இதில் 2-3 விழுக்காடு ஆஸ்கார்பிக் அமிலமும் 7.25 விழுக்காடு சர்க்கரையும் உள்ளது.

கூவிளங்கனி, குருதி கலந்த வயிற்றுப்போக்கு நோய்க்கு நல்ல மருந்து. இதன் குரோமோசோம் எண் 2n = 18 என பானாஜிபால் (1957), இராகவன் (1957), நந்தா (1982) என்போரும்.2n = 36 என, சானகி அம்மாளும் (1945) கூறியுள்ளனர்.